ADDED : மே 09, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், மே 9
ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ப.வேலுார், மோகனுார், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். கடந்த வாரம் வியாழக்கிழமை மே, 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறையால் ஏலம் நடைபெறவில்லை.
நேற்று நடந்த ஏலத்திற்கு, 11,040 கிலோ தேங்காய் பருப்பை விற்பனைக்காக வரத்தானது. அதிகபட்சமாக கிலோ, ரூ.176.78, குறைந்தபட்சமாக, ரூ.146.99, சராசரியாக, ரூ.175.89 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 16 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது.

