/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேளாண்மை சந்தையில் சரிந்தது தேங்காய் விலை
/
வேளாண்மை சந்தையில் சரிந்தது தேங்காய் விலை
ADDED : ஜூலை 09, 2025 01:37 AM
ப.வேலுார், தேசிய வேளாண்மை சந்தையில், வரத்து அதிகமானதால் தேங்காய் விலை சரிவடைந்தது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பரமத்தி, பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை கொண்டு
வந்தனர்.
கடந்த வாரம் அதிகபட்சமாக தேங்காய் கிலோ, 74.20 ரூபாய், குறைந்தபட்சமாக, 69.69 ரூபாய், சராசரியாக, 72 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 7 லட்சத்து, 91 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரம் நடந்த ஏலத்திற்கு, 38,500 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு
வந்தனர்.
நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ, 69.99 ரூபாய், குறைந்தபட்சமாக, 52.10 ரூபாய், சராசரியாக, 68.19 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 11 லட்சத்து, 15 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 51,388 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
கடந்த வாரத்தை விட அதிகமாக, 12,888 தேங்காய்களை ஏலத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். வரத்து அதிகமானதால் தேங்காய் விலை சரிவடைந்தது.