/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை ஏறுமுகம்
/
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை ஏறுமுகம்
ADDED : நவ 27, 2024 12:55 AM
தேசிய வேளாண் சந்தையில்
தேங்காய் விலை ஏறுமுகம்
ப.வேலுார், நவ. 27--
நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, செவ்வாய் தோறும் தேங்காய் ஏலம் நடக்கிறது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் நடந்த ஏலத்தில், தேங்காய் அதிகபட்சம் கிலோ, 48.10 ரூபாய், குறைந்தபட்சம், 24.19 ரூபாய், சராசரி, 43.90 ரூபாய் என, மொத்தம், 35,000 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 50.20 ரூபாய், குறைந்தபட்சம், 26.38 ரூபாய், சராசரி, 45.10 ரூபாய் என, 1,980 தேங்காய்கள், 54,000 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட, 2.10 ரூபாய் உயர்ந்ததால், தேங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.