/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வு
/
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வு
ADDED : நவ 20, 2024 07:44 AM
ப.வேலுார்: ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை தேங்காய் ஏலம் நடப்பது வழக்கம். இங்கு, ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதேபோல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர். நேற்று நடந்த ஏலத்திற்கு, 1,940 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
கடந்த வாரம் நடந்த ஏலத்தில், அதிகபட்சம் கிலோ, 41.50 ரூபாய், குறைந்தபட்சம், 27.79 ரூபாய், சராசரி, 38.10 ரூபாய் என, 31,000 ரூபாய்க்கு வர்த்தகமானது. இதேபோல், நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 48.10 ரூபாய், குறைந்தபட்சம், 24.19 ரூபாய், சராசரி, 43.90 ரூபாய் என, 35,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை விட தேங்காய் விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.