/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வு
/
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வு
ADDED : ஜூலை 02, 2025 02:10 AM
ப.வேலுார், தேசிய வேளாண்மை சந்தையில், தேங்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ப.வேலுாரில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. தேசிய வேளாண்மை சந்தைக்கு ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பரமத்தி, பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வந்தனர்.
அதேபோல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளி மாவட்ட வியாபாரிகளும் வாங்கி சென்றனர். நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு, 38,500 தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.
கடந்த வாரம் அதிகபட்சமாக கிலோ, 70.70 ரூபாய், குறைந்தபட்சமாக 62.62 ரூபாய், சராசரியாக, 67.67 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் ஆறு லட்சத்து, 20 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ, 74.20, குறைந்தபட்சமாக, 69.69, சராசரியாக, 72 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், ஏழு லட்சத்து, 91 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.