/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வு
/
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வு
ADDED : டிச 31, 2025 05:54 AM
.வேலுார்: ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடப்பது வழக்கம்.
இந்த சந்தைக்கு, ப.வேலுார், மோகனுார், பொத்-தனுார், பரமத்தி, பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசா-யிகள் தேங்காய்களை கொண்டு வருகின்றனர். அதேபோல், உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளிமாவட்ட வியாபாரிகளும்
வருகின்றனர்.
கடந்த வாரம் நடந்த ஏலத்தில் அதிகபட்சம் ஒரு கிலோ, 60.61 ரூபாய், குறைந்தபட்சம், 37.10 ரூபாய், சராசரி, 52.90 ரூபாய் என, மொத்தம், 5 லட்சத்து, 21,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரம் நடந்த ஏலத்திற்கு, 28,290 தேங்காய்-களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.
நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 63.69 ரூபாய், குறைந்தபட்சம், 40.20 ரூபாய், சராசரி, 56.85 ரூபாய் என, மொத்தம், 3 லட்சத்து, 84,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 17,427 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

