sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரம் புது பஸ் ஸ்டாண்ட் பணி விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை

/

ராசிபுரம் புது பஸ் ஸ்டாண்ட் பணி விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை

ராசிபுரம் புது பஸ் ஸ்டாண்ட் பணி விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை

ராசிபுரம் புது பஸ் ஸ்டாண்ட் பணி விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை


ADDED : ஜூலை 19, 2025 01:49 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்;ராசிபுரம் நகராட்சி, அனைப்பாளையம் பகுதியில், ஆறு தளங்களுடன், 53.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எக்ஸ்-ரே, ஆய்வகம், ஸ்கேன் அறை, புற நோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, முடவியல், கண், பல், காது, குழந்தை மருத்துவம், அவசர கால மகப்பேறு குழந்தை பராமரிப்பு, பிரசவ அறை, இருதய கண்காணிப்பு, ஆண், பெண் பொது மருத்துவம், பிரேத பிரிசோதனை கூடம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுடன், 250 படுக்கைகள் கொண்ட மாவட்ட தலைமை மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதை கலெக்டர் துர்கா மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராசிபுரம் நகராட்சி, அணைப்பாளையத்தில், 10.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை, ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து, வெண்ணந்துார் ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 13.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டப்பட்டு வருவதையும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான ஆய்வு மேற்கொண்டார்.






      Dinamalar
      Follow us