/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை பணியை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரருக்கு கலெக்டர் உத்தரவு
/
சாலை பணியை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரருக்கு கலெக்டர் உத்தரவு
சாலை பணியை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரருக்கு கலெக்டர் உத்தரவு
சாலை பணியை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரருக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : பிப் 05, 2025 07:15 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட குப்பாண்டம்பாளையம் பகுதியில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 82.51 லட்சத்தில் குள்ளநாயக்கன்பாளையம் முதல் பந்தகால்மேடு சாலை வரை தார்ச்சாலை அமைக்கும் பணியை, கலெக்டர் உமா ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைவாக முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, சமயசங்கிலி பகுதியில், 16.50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்தார். அங்கு, குழந்தைகளின் வருகை விபரம், இணை உணவு வழங்குதல், குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை, உயரம் குறித்து கேட்டறிந்தார். காடச்சநல்லுார், ஐந்துபனை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், 44.9 லட்சம் ரூபாயில் சிறுபாலம் கட்டப்பட்டுள்ளதையும், சீராம்பாளையம் பகுதியில், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டார். அதை தொடர்ந்து, கல்லங்காட்டுவலசு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்துகளின் இருப்பு, ரத்த பரிசோதனை மாதிரி விபரம், நோயாளிகளுக்கான அடிப்படை வசதி, படுக்கை வசதி, கர்ப்பிணிகள் பதிவு விபரம் குறித்து ஆய்வு செய்தார்.