sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முன் விரோதத்தில் கல்லுாரி மாணவர் கொலை: மேலும் 2 சிறுவர்கள் கைது

/

முன் விரோதத்தில் கல்லுாரி மாணவர் கொலை: மேலும் 2 சிறுவர்கள் கைது

முன் விரோதத்தில் கல்லுாரி மாணவர் கொலை: மேலும் 2 சிறுவர்கள் கைது

முன் விரோதத்தில் கல்லுாரி மாணவர் கொலை: மேலும் 2 சிறுவர்கள் கைது


ADDED : செப் 02, 2025 01:40 AM

Google News

ADDED : செப் 02, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:நாமக்கல், கொண்டிசெட்டிப்பட்டி குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பிரேம்குமார் மகன் மனோ, 19; பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு மாணவன். கடந்த, 28 மாலை வீட்டை விட்டு வெளியேறிய மனோ, மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், முல்லை நகர் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அப்பகுதி, 'சிசிடிவி' கேமராக்களை நாமக்கல் போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில் அதே பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள், மனோவை டூவீலரில் அழைத்து செல்வது பதிவாகி இருந்தது.அவர்களை பிடிக்க, ஏ.எஸ்.பி., ஆகாஷ் ஜோஷி தலைமையில், மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களை தேடி வந்த போலீசார், நேற்று முன்தினம் மாலை இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். சிறுவர்களில் ஒருவரின், 15 வயது தங்கையை மனோ கேலி, கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் மனோவை நைசாக பேசி அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பி சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், கொலை செய்து தலைமறைவான இருவரையும் தப்பிக்க உதவி செய்த, இரண்டு சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். அதன் மூலம், முன் விரோதம் காரணமாக கல்லுாரி மாணவர் கொலை செய்த வழக்கில், நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us