/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி - திருமணி முத்தாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற குழு அமைப்பு
/
காவிரி - திருமணி முத்தாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற குழு அமைப்பு
காவிரி - திருமணி முத்தாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற குழு அமைப்பு
காவிரி - திருமணி முத்தாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற குழு அமைப்பு
ADDED : நவ 03, 2024 02:21 AM
நாமக்கல்: நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நமக்கல், சேலம், திருச்சி மாவட்ட விவசாயிகள், பொதுமக்க-ளிடம், காவிரி ஆற்றின் துணை நதியாக விளங்கி வரும் திருமணி-முத்தாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்-பெற்றுள்ளது. இத்திட்டம் முழுமையான வெற்றி பெற, நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களில் உள்ள சமூக தன்னார்-வலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவை நிய-மிக்க, கொ.ம.தே.க., முடிவு செய்துள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து, நாமக்கல் மாவட்டம் பவித்திரம் வரை, 132 கி.மீ., துாரம் இந்த திட்டத்தினால் பயன்பெற உள்ளது. இத்-திட்டம் நிறைவேற்றப்பட்டால், 50,000 ஏக்கர் வரை பாசனம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இதற்கான முதல் முயற்சியாக, 'காவிரி - திருமணிமுத்தாறு மீட்பு திட்டம்' என்ற குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் சேர விருப்பம் உள்ள தன்னார்வலர்கள், 8111001999 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.