/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.25,000 அபராதம்
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.25,000 அபராதம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.25,000 அபராதம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.25,000 அபராதம்
ADDED : செப் 28, 2024 04:04 AM
நாமக்கல்: நாமக்கல்லில், ஐந்து டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டதுடன், 25,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்-டது.
நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே, கந்து முத்துசாமி தெருவில் உள்ள ஒரு கிடங்கில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மாநக-ராட்சி கமிஷனர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. சம்பந்தப்-பட்ட இடத்தில் ஆய்வு செய்தபோது, 5 டன் பிளாஸ்டிக் பை, தட்டு, டம்ளர் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. அவற்றை, 2 லாரிகளில் ஏற்றிச் சென்று குப்பைக் கிடங்கில் வைத்து அழிக்க உத்தரவிட்டார்.மேலும், சம்பந்தப்பட்ட கிடங்கின் உரிமையாளர் மனோஜ்குமார், 37, என்பவரிடம், 25,000 ரூபாய் அபராதம் வசூலிக்கவும் உத்தரவிட்டார். ஆய்வின்-போது, துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, மேற்பார்வையாளர் செல்-வகுமார் உள்ளிட்ட பணியாளர்கள் உடனிருந்தனர்.