sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல்லில் வரும் 12ல் கூட்டுறவு துறை பணியாளர் நாள் குறைதீர்க்கும் கூட்டம்

/

நாமக்கல்லில் வரும் 12ல் கூட்டுறவு துறை பணியாளர் நாள் குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல்லில் வரும் 12ல் கூட்டுறவு துறை பணியாளர் நாள் குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல்லில் வரும் 12ல் கூட்டுறவு துறை பணியாளர் நாள் குறைதீர்க்கும் கூட்டம்


ADDED : செப் 09, 2025 02:38 AM

Google News

ADDED : செப் 09, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், ': நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைதீர்க்கும் பணியாளர் நாள் நிகழ்ச்சி, வரும், 12ல் நடக்கிறது என, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரின் உத்தரவுப்படி, கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்யும் வகையில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மண்டலத்தில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, 2வது வெள்ளிக்கிழமை, மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறை தீர்க்கும் பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, பணியாளர் நாள் நிகழ்ச்சி வரும், 12 காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டுறவு நிறுவன பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள், தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம்.

அந்த விண்ணப்பங்கள் நிகழ்ச்சியின்போதே ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் தீர்வு செய்யப்படும். நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு துறையில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து நிலை பணியாளர்களும், தங்களுக்கு ஏதாவது குறை இருப்பின், பணியாளர் நாள் கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us