/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
/
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
ADDED : ஏப் 22, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 28ல் துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில், 92 மையங்களில், பத்தாம் வகுப்பு தேர்வு நடந்தது. அதில், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என, 275 பள்ளிகளை சேர்ந்த, 19,038 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர்.
இத்தேர்வு, கடந்த, 15ல் முடிந்தது. விடைத்தாள் மதிப்பீடு செய்ய, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் அண்ணாசலை அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., மெட்ரிக் பள்ளி என, மூன்று மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று மையங்களிலும், 940 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.