ADDED : டிச 10, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.15 லட்சத்துக்கு
பருத்தி ஏலம்
ராசிபுரம், டிச. 10-
ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் அதிகளவு பருத்தி பயிரிடப்படுகிறது. விளைந்த பருத்தியை பறித்து, ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடக்கும் ஏலத்தில் விற்பனை
செய்கின்றனர்.
அதன்படி, நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், 616 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரகம் குறைந்தபட்சம், 7,255 ரூபாய், அதிகபட்சம், 7,799 ரூபாய்; கொட்டு ரகம் குறைந்தபட்சம், 4,080 ரூபாய், அதிகபட்சம், 4,380 ரூபாய்க்கு விற்பனையானது. ஆர்.சி.எச்., 612 மூட்டை, கொட்டு, 4 மூட்டை என மொத்தம், 616 மூட்டை பருத்தி, 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.