/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.2.5 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
/
ரூ.2.5 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
ADDED : ஆக 15, 2025 02:39 AM
ராசிபுரம், ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில், அதிகளவு பருத்தி பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் உள்ள பருத்தியை விவசாயிகளிடம் வாங்கி, ஏல முறையில் வியாபாரிகளுக்கு ஆர்.சி.எம்.எஸ்., என்ற ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கம் விற்பனை செய்து வருகிறது.
பருத்தியை பொருத்த வரை ஆ.சி.எச்., சுரபி, கொட்டு ரகங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
நேற்று ஆர்.கவுண்டம்பாளையத்தில் உள்ள ஆர்.சி.எம்.எஸ்., கிடங்கில், 111 பருத்தி மூட்டை விற்பனைக்கு வந்திருந்தது. ஆர்.சி.எச். ரகம் குறைந்த பட்சமாக குவிண்டால், 7,062 ரூபாய், அதிகபட்சமாக, 7,609 ரூபாய்க்கு விற்பனையானது. கொட்டு ரகம், 4,300 லிருந்து, 4,527 ரூபாய் வரை விற்றது. ஆர்.சி.எச்., ரகம், 108 மூட்டை, கொட்டு ரகம், 3 மூட்டை என, 111 மூட்டை, 2.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.