/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.30 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
/
ரூ.30 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
ADDED : டிச 24, 2024 01:51 AM
ராசிபுரம், டிச. 24-
ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் ஆர்.சி.எம்.எஸ்., கிடங்கில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. 1,375 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் ஆர்.சி.எச்., ரகம் குறைந்தபட்சம், 7,339 ரூபாய், அதிகபட்சம், 7,911 ரூபாய்; டி.சி.எச்., குறைந்தபட்சம், 9,135 ரூபாய், அதிகபட்சம், 9,215 ரூபாய்; கொட்டு ரகம் குறைந்தபட்சம், 3,869 ரூபாய், அதிகபட்சம், 4,899 ரூபாய்க்கு விற்பனையானது.
ஆர்.சி.எச்., 1,327 மூட்டை, டி.சி.எச்., 16, கொட்டு, 32 மூட்டை என, மொத்தம், 1,375 மூட்டை பருத்தி, 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த, 4 வாரங்களுக்கு முன் தான் பருத்தி ஏலம் தொடங்கியது. தொடங்கியதில் இருந்து, டி.சி.எச்., பருத்தி ரகம் ஏலத்திற்கு வரவில்லை. நேற்று தான் ஏலத்திற்கு வந்தது.