sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குமாரபாளையம் நகராட்சிக்கு கெட்ட பெயர் சுகாதாரத்துறை மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

/

குமாரபாளையம் நகராட்சிக்கு கெட்ட பெயர் சுகாதாரத்துறை மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

குமாரபாளையம் நகராட்சிக்கு கெட்ட பெயர் சுகாதாரத்துறை மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

குமாரபாளையம் நகராட்சிக்கு கெட்ட பெயர் சுகாதாரத்துறை மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு


ADDED : அக் 29, 2024 01:12 AM

Google News

ADDED : அக் 29, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம் நகராட்சிக்கு கெட்ட பெயர்

சுகாதாரத்துறை மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

குமாரபாளையம், அக். 29-

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில், நேற்று நகர்மன்ற கூட்டம் நடந்தது. தலைவர் விஜய்கண்ணன் தலைமை வகித்தார்.

இதில் நடந்த விவாதம் பின்வருமாறு:

கதிரவன், தி.மு.க.,: வடிகால் துாய்மைப்பணிக்கு ஆட்களே வருவதில்லை. ஆட்கள் பற்றாக்குறை என்கின்றனர். இதுகுறித்து ஆலோசித்து ஆட்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தர்மராஜன், தி.மு.க.,: என் வார்டில், சுகாதார பணிக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? போன் செய்தாலும் எடுப்பது கிடையாது. வடிகாலில் இருந்து வெளியில் எடுத்து போடப்பட்ட மண் குவியலில், 3 அடிக்கு செடிகள் முளைத்துள்ளன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கோவிந்தராஜ், தி.மு.க.,: ஒரே ஒரு துாய்மைப்பணியாளர் வந்து கொண்டிருந்தார். அவரும் தற்போது வருவதில்லை. போன் போட்டாலும் எடுப்பதில்லை. ஆட்கள் வருவார்களா? இல்லையா? வார்டு மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. பேட்டரி வண்டி என்ன ஆனது?

சுமதி சுயே.,: வடிகால் துாய்மைப்பணிக்கு ஆட்கள் வரச்சொல்லி எந்த பலனும் இல்லை. பல நாட்களாக குப்பை அகற்றப்படாமல் உள்ளது.

பாலசுப்ரமணி, அ.தி.மு.க.,: குமாரபாளையம் நகராட்சி, சிறந்த நகராட்சி என விருது பெற்றுள்ளது. ஆனால், சிறந்த நகராட்சி என்ற பெயர் இல்லாமல் போகும் அளவிற்கு, குப்பைகள் அகற்றாமல், வடிகால்களை துாய்மை படுத்தாமல் சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது.

வெங்கடேசன், துணைத்

தலைவர்: சுகாதாரத்துறை அலுவலர்கள், வார்டுக்குள் வந்தால் தான் எங்கு, என்ன குறை என்பது தெரியவரும். எந்த கவுன்சிலர்களையும் அவர்கள் சந்திப்பதில்லை. அடிக்கடி மீட்டிங் போட்டு, பணியாளர்களுக்கு பணியை வரன்முறைப்படுத்த வேண்டும்.

விஜய்கண்ணன், தலைவர்: ஆட்கள் பற்றாக்குறை என்றனர். அது சரி செய்யப்பட்டது. குப்பை கொட்ட இடம் இல்லை; அதனால், தான் குப்பை எடுக்க முடியவில்லை என்றனர். அதற்கும் இடம் ரெடி செய்து விட்டோம். அடுத்து குப்பை வண்டிக்கு டிரைவர் இல்லை என்றனர். ஆட்கள் நியமனம் செய்து அதனையும் சரி செய்யப்பட்டது. அடுத்து பொக்லைன் ஓட்ட ஆள் இல்லை; அதனால் தான் பணி செய்ய முடியவில்லை என்றனர். எல்லாம் சரி செய்து கொடுத்தாலும், மெடிக்கல் லீவில் போய் விடுகின்றனர். நகராட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணி, சுகாதாரத்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us