sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

போலீசாருக்கு கோர்ட் அறிவுரை குட்கா விற்றவர் விடுவிப்பு

/

போலீசாருக்கு கோர்ட் அறிவுரை குட்கா விற்றவர் விடுவிப்பு

போலீசாருக்கு கோர்ட் அறிவுரை குட்கா விற்றவர் விடுவிப்பு

போலீசாருக்கு கோர்ட் அறிவுரை குட்கா விற்றவர் விடுவிப்பு


ADDED : ஜூலை 17, 2025 02:16 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், ப.வேலுார், பழைய பைபாஸ் சாலையில் டீக்கடை நடத்தி வருபவர் சுப்பிரமணியன் மகன் சக்திவேல், 47; கடந்த, 12ல் இவரது டீக்கடையில், ப.வேலுார் எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 1,980 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, சக்திவேலை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, 12 கிலோ, 825 கிராம் எடை கொண்டது. இதன் மதிப்பு, 19,440 ரூபாயாகும். ப.வேலுார் போலீசார் சக்திவேலை சிறைக்கு அனுப்ப தேவையான எப்.ஐ.ஆர்., மற்றும் மருத்துவ சான்றிதழ்களை பெற்று, பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு, குற்றவாளிகளை ஆஜர்படுத்த வேண்டும் என, ப.வேலுார் போலீசாருக்கு பரமத்தி குற்றவியல் நீதிமன்றம் அறிவுரை வழங்கி, டீக்கடை உரிமையாளர் சக்திவேலை சிறைக்கு அனுப்ப மறுத்துவிட்டது. இதனால், ப.வேலுார் போலீசார், சக்திவேலை விடுவித்து அவரிடம் இருந்து கைப்பற்றிய குட்கா பொருட்களை, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இதனால் குட்கா விற்கும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us