sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்; கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி வழிபாடு

/

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்; கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி வழிபாடு

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்; கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி வழிபாடு

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்; கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி வழிபாடு


ADDED : ஜன 16, 2025 06:39 AM

Google News

ADDED : ஜன 16, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, விவசாய நிலங்களில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

தமிழகம் முழுவதும், பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை, கடந்த, 13ல் துவங்கி, இன்று வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகிப்பண்டிகை, நேற்று முன்தினம், சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக, பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, கரும்புகளுடன், பொங்கல் வைத்து படையல் வைத்து வழிபட்டனர். மூன்றாம் நாளான நேற்று, விவசாயிகளின் நண்பனாகவும், உழவுக்கு உயிருட்டும் தோழனாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி செலுத்தும் வகையில், விருந்து படைத்து மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.முன்னதாக, நேற்று காலை மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளை சீவி வர்ணம் பூசி, கூரான கொம்பில் சலங்கை கட்டிவிட்டு அழகுபடுத்தினர். பின், பழைய மூக்கணாங்கயிறுகளை மாற்றி புதிய மூக்கணாங்கயிறுகளை மாட்டினர். தொடர்ந்து, வழிபாடு நடத்தி, மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஊட்டி உற்சாகமாக கொண்டாடினர். இன்று, காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us