ADDED : மே 07, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் யூனியன், புதன் சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. அதிகாலை, 4:00 மணிக்கு துவங்கும் இந்த சந்தைக்கு, நாமக்கல், புதுச்சத்திரம், வேலகவுண்டம்பட்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த
மாட்டுச்சந்தைக்கு கேரளாவில் இருந்து மாடுகள் வாங்கி செல்ல ஏராளமான வியாபாரிகள் வந்ததால், மாடுகள் விற்பனை அதிகரித்து, இரண்டு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

