/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ. 2.5 கோடிக்கு மாடுகள் வர்த்தகம்
/
ரூ. 2.5 கோடிக்கு மாடுகள் வர்த்தகம்
ADDED : மே 28, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம், புதன்சந்தை, மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனை அதிகரித்து நேற்று, 2.5 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் நேற்று மாட்டுச்சந்தை நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு துவங்கிய சந்தைக்கு நாமக்கல், வேலகவுண்டம்பட்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள், மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று கேரள வியாபாரிகள் அதிகளவில் வந்து மாடுகளை வாங்கி சென்றனர். ஒரே நாளில், 2.5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள்
தெரிவித்தனர்.