/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நோய் தாக்கி மாடுகள் இறப்பு; விவசாயிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு
/
நோய் தாக்கி மாடுகள் இறப்பு; விவசாயிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு
நோய் தாக்கி மாடுகள் இறப்பு; விவசாயிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு
நோய் தாக்கி மாடுகள் இறப்பு; விவசாயிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு
ADDED : டிச 09, 2024 07:11 AM
மோகனுார்: மோகனுார் தாலுகா, ராசிபாளையம் பஞ்.,க்கு உட்பட்ட மொட்டகாளிப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணி, செல்வி தம்பதியர். இவர்கள், 7 பசு மாடுகள் வளர்த்து வந்தனர். இந்த கறவை மாடுகளுக்கு அரிய வகை நோய் தாக்கி, சமீபத்தில் இறந்தன. தகவலறிந்த, எம்.பி., ராஜேஸ்குமார் நேரடியாக சென்று, விவசாயிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அரசு தரப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, நாமக்கல் கலெக்டர் உமாவிடம் இது குறித்து தெரிவித்தார். அவரும், கலெக்டரின் விருப்ப உரிமை தொகையில் இருந்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக, இரண்டு லட்சம் ரூபாய் வழங்கினார். அவற்றை, விவசாயிகள் சுப்ரமணி, செல்வி தம்பதியரிடம், எம்.பி., ராஜேஸ்குமார் வழங்கினார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், தாசில்தார் மணிகண்டன், அட்மா திட்ட தலைவர் நவலடி, கால்நடை மருத்துவர் காளிமுத்து, அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.