sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சிக்கன் சவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு: இழப்பீடு கேட்டு தாக்கலான வழக்கில் கலெக்டர் பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

/

சிக்கன் சவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு: இழப்பீடு கேட்டு தாக்கலான வழக்கில் கலெக்டர் பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

சிக்கன் சவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு: இழப்பீடு கேட்டு தாக்கலான வழக்கில் கலெக்டர் பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

சிக்கன் சவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு: இழப்பீடு கேட்டு தாக்கலான வழக்கில் கலெக்டர் பதில் அளிக்க கோர்ட் உத்தரவு


ADDED : ஜூன் 21, 2024 07:12 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் : நாமக்கல் தனியார் ஹோட்டலில் சிக்கன் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இழப்பீடு வழக்கில், மாவட்ட கலெக்டர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் பதில் அளிக்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாமக்கல் எஸ்.பி.

புதூரைச் சேர்ந்தவர் தவக்குமார், இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி சுஜாதா,42. அவர்களுக்கு கலையரசி என்ற மகளும், பூபதி என்ற மகனும் இருந்தனர். கடந்த, 2023 செப்டம்பர் மாதம் நாமக்கல் நகரில் பரமத்தி ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் சிக்கன் சவர்மா வாங்கி வந்து குடும்பத்துடன் சாப்பிட்டனர். சாப்பிட்ட குழந்தைகள் இருவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டது. குழந்தைகள் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் கலையரசியின் உடல் நலம் மோசம் அடைந்தது. இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அதே ஹோட்டலில், அதே நாள் சாப்பிட்ட, 43 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கலையரசியின் தாயார் சுஜாதா நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், தன் மகள் உயிரிழப்பிற்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது; நாமக்கல் மாவட்ட நிர்வாகமும், உணவு பாதுகாப்பு அலுவலரும், உணவு பாதுகாப்பு சட்டப்படி தரமான உணவு வகைகள், ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கவனிக்க தவறிவிட்டனர். கலையரசியின் இறப்பிற்கு ஈடாக, 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மேலும், அதே உணவகத்தில் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், 43 பேருக்கும் சிக்கன் சவர்மா சாப்பிட்டதால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே மாதிரியான பாதிப்பு என்பதால் தமக்கு இழப்பீடு வழங்குவதைப் போல மற்ற வாடிக்கையாளர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.கலையரசியின் தாயார் தாக்கல் செய்துள்ள வழக்கில் அவருக்கு இழப்பீடு கேட்டுள்ளதோடு பாதிக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத நபர்களுக்கும் இழப்பீடு கேட்ட நிலையில், புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி, நுகர்வோர் பொதுநல வழக்காக நுகர்வோர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கில் வரும் ஜூலை, 19ம் தேதி ஹோட்டல் உரிமையாளர், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரமோலா ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us