/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ் ஸ்டாண்ட் நுழைவு வளைவிற்கு அண்ணாதுரை பெயர் சூட்ட முடிவு
/
பஸ் ஸ்டாண்ட் நுழைவு வளைவிற்கு அண்ணாதுரை பெயர் சூட்ட முடிவு
பஸ் ஸ்டாண்ட் நுழைவு வளைவிற்கு அண்ணாதுரை பெயர் சூட்ட முடிவு
பஸ் ஸ்டாண்ட் நுழைவு வளைவிற்கு அண்ணாதுரை பெயர் சூட்ட முடிவு
ADDED : அக் 10, 2024 03:04 AM
நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியின் அவசர கூட்டம், நேற்று நடந்தது. மேயர் கலாநிதி தலைமை வகித்தார். துணை மேயர் பூபதி, மாநக-ராட்சி ஆணையாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.
கூட்டத்தில், நாமக்கல் மாநகராட்சி, 2-வது வார்டு முதலைப்பட்-டியில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட உள்ள வர-வேற்பு நுழைவு வளைவிற்கு, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு வளைவு என பெயர் சூட்ட அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான கருத்துருவை அரசுக்கு அனுப்பி வைக்கவும் கூட்டத்தில் ஏக மனதாக முடிவு செய்யப்-பட்டது.மேலும், நாமக்கல் புதிய ஸ்டாண்டில் உள்ள கடைகள், ஓட்-டல்கள் மற்றும் ஆண்டு உரிம இனங்களுக்கு, உரிமம் அளிக்க கடந்த, 4ல் பொது ஏலம் வெளிப்படையாக நடத்தப்பட்டது. இந்த ஏலத்துக்கு மாமன்றம் அங்கீகாரம் அளித்தும், ஏலம் போகாத கடைகளுக்கு மறுஏலம் நடத்துவது உள்பட, 8 தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி கவுன்சிலர்கள், அலு-வலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

