/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அழுகிய ஆண் சடலம் ராசிபுரம் போலீசார் மீட்பு
/
அழுகிய ஆண் சடலம் ராசிபுரம் போலீசார் மீட்பு
ADDED : செப் 04, 2025 02:14 AM
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டி, அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் வீரன் மகன் கொண்டன், 50; கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி விஜயா, 45; இவர்களுக்கு மகன் சஞ்சய், மகள் கிருத்திகா உள்ளனர். கிருத்திகாவிற்கு திருமணமாகி விட்டது. ஒரு மாதத்திற்கு முன் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோவித்துக்கொண்டு விஜயா தன் மகனுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால், கொண்டன் ராசிபுரத்தில் மாரப்பன் தோட்டத்தில் உள்ள ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அக்கம் பக்கத்தினர் ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து கதவை திறந்தபோது, உள்ளே உடல் அழுகிய நிலையில் கொண்டன் துாக்கில் தொங்கி கொண்டிருந்தர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
க