/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வனப்பகுதியில் அழுகிய ஆண் சடலம் மீட்பு
/
வனப்பகுதியில் அழுகிய ஆண் சடலம் மீட்பு
ADDED : ஜூலை 07, 2025 04:34 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஆயில்பட்டி அடுத்த மாவாறு வனப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள், துர்நாற்றம் வீசுவ-தாக ஆயில்பட்டி  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைய-டுத்து போலீசார் மாவாறு வனப்பகுதிக்கு சென்று சோதனையிட்-டனர். அங்கு ஒரு மரத்தில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில்  துாக்கில் தொங்கி கொண்டிருந்தது.
ஆயில்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவம-னைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசார-ணையில், தம்மம்பட்டியை சேர்ந்த இருளப்பன்  மகன் ஆறு-முகம், 60, கடந்த மாதம், 14ம் தேதி முதல் காணவில்லை என்றும்  சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவர்  வனப்பகு-திக்கு வந்து துாக்கில்  தொங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், ஆயில்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

