/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வளர்ச்சி திட்டப்பணி: அமைச்சர் துவக்கி வைப்பு
/
வளர்ச்சி திட்டப்பணி: அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 23, 2025 05:03 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் பஞ்., யூனியன், கள்ளாங்குளம், கட்டனாச்சம்-பட்டி, செம்மாண்டப்பட்டி, அக்கரைப்பட்டி போன்ற பஞ்., பகு-திகளில், முதல்வரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் புதிதாக தார்ச்சாலை அமைத்தல்; மூலக்காடு பஞ்.,ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுதல்; மதியம்பட்டி பஞ்.,ல் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா; அலவாய்பட்டி பஞ்.,ல் பயணியர் நிழற்கூடம் அடிக்கல் நாட்டு விழா; நாச்சிப்பட்டி பஞ்.,ல் ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
அமைச்சர் மதிவேந்தன், 3.4 கோடி மதிப்பிலான திட்டப்பணிக-ளுக்கு பூமி பூஜை மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
வெண்ணந்துார் ஆத்மா குழு தலைவர் துரைசாமி, திட்ட இயக்-குனர் வடிவேல், பி.டி.ஓ.,க்கள் வனிதா, கிருஷ்ணன், பொறியா-ளர்கள் பூபதி, ஆனந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.