/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாசி சஷ்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
/
மாசி சஷ்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
மாசி சஷ்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
மாசி சஷ்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ADDED : பிப் 16, 2024 10:35 AM
நாமக்கல்: மாசி வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு, நாமக்கல்லில் முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.
* நாமக்கல்-மோகனுார் சாலை, காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்று மாசி வளர்பிறை சஷ்டி விழா நடந்தது. காலை, 10:00 மணிக்கு மூலவர் பாலதண்டாயுதபாணிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபி ேஷகம் நடந்தது. 12:00 மணிக்கு சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
* நாமக்கல், கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள பாலதண்டா
யுதபாணிக்கு, பல்வேறு அபி ேஷகங்கள் செய்து, ராஜஅலங்காரத்தில் காட்சியளித்தார்.
* மோகனுார், காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு
தங்கக்கவசம் சாத்தப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
* ப.வேலுார், பேட்டை பகவதியம்மன் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
* கபிலர்மலை, பாலசுப்பிரமணியர் கோவில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகன், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனுார் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், நன்செய் இடையாறு ராஜா சுவாமி திருக்கோவில் உள்ள ராஜாசுவாமி, பாலப்பட்டி கதிர்மலை ஸ்கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வான சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது.
* வெண்ணந்துார், குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.