sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

/

பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்


ADDED : ஜன 20, 2025 07:00 AM

Google News

ADDED : ஜன 20, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, கோபாலபுரத்தில் செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இரவு, கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, கங்கா, யமுனா, காவேரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நதிகளின் தீர்த்தம் பெருமாள் கோவிலில் வைத்து வழிபாடு செய்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

இதில், பெண்கள் திரளாக கலந்துகொண்டு தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும், கோபுர கலசங்களும் பக்தர்களின் தரிசனத்திற்காக கொண்டு வரப்பட்டது. நேற்று மாலை, பல்வேறு பூஜைகள், யாகங்கள் நடந்தன. புண்யாகவாசனம், வேதபாராயணம், நவக்கிரஹ பூஜைகள் நடந்தன. இன்று அதிகாலை கடங்கள் புறப்பாடு, தீபாராதனையை தொடர்ந்து, 6:00 மணிக்கு புனித நீரை, கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us