/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
31க்குள் சொத்து வரி செலுத்தினால் சலுகை
/
31க்குள் சொத்து வரி செலுத்தினால் சலுகை
ADDED : அக் 10, 2025 01:22 AM
குமாரபாளையம், குமாரபாளையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை மற்றும் நடப்பு சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், வரியில்லா இனங்கள் ஆகியவற்றை, நகராட்சி கருவூலத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் என, நகராட்சி கமிஷனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
குமாரபாளையம் நகராட்சி பகுதி பொதுமக்கள், 2025-26ம் ஆண்டிற்கான சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தினால், 5 சதவீதம் வரிச்சலுகை வழங்கப்படும். வரும், 31க்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. குமாரபாளையம் நகராட்சி பொதுமக்கள் இச்சலுகையை பயன்படுத்தி, இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை நகராட்சி கருவூலத்தில் செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.