/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.கோடு விவேகானந்தா மகளிர் இன்ஜி., கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
தி.கோடு விவேகானந்தா மகளிர் இன்ஜி., கல்லுாரி பட்டமளிப்பு விழா
தி.கோடு விவேகானந்தா மகளிர் இன்ஜி., கல்லுாரி பட்டமளிப்பு விழா
தி.கோடு விவேகானந்தா மகளிர் இன்ஜி., கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : டிச 31, 2024 07:27 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லுாரிகள் மற்றும் விவேகானந்தா மகளிர் மேலாண்மை கல்லுாரி பட்டமளிப்பு விழா, விவேகானந்தா கலையரங்கில் நடந்தது. விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கருணாநிதி தலைமை வகித்து, பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார். மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணவேணிகருணாநிதி, இணை மேலாண்மை இயக்குனர் அர்த்தநாரீஸ்வரன், இணை செயலாளர் ஸ்ரீராகநிதி, துணை தாளாளர் கிருபாநிதி, இயக்குனர் நிவேதனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி முதல்வர்கள் விஜயகுமார், தேவி, மேலாண்மையியல் கல்லுாரி இயக்குனர் மோகனசுந்தரம் ஆகியோர் கல்லுாரி நிகழ்வுகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, 2022 - 2023ம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற இளநிலை பொறியியல் மற்றும் முதுநிலை பொறியியல் பாடப் பிரிவில் பல்கலை தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த, 27 மாணவியருக்கு பதக்கம், 796 மாணவியருக்கு பட்டச்சான்றிதழ் வழங்கி பேசினார். தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் குப்புசாமி, தலைமை நிர்வாகி சொக்கலிங்கம், ஆராய்ச்சி இயக்குனர் பாலகுருநாதன், அட்மிஷன் இயக்குனர் சவுண்டப்பன், தேர்வாணையாளர் கண்ணன், திறன் மேம்பாட்டு இயக்குனர் குமரவேல், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.