sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கவர்னருக்கு எதிராக தீர்ப்பு தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

/

கவர்னருக்கு எதிராக தீர்ப்பு தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

கவர்னருக்கு எதிராக தீர்ப்பு தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

கவர்னருக்கு எதிராக தீர்ப்பு தி.மு.க.,வினர் கொண்டாட்டம்


ADDED : ஏப் 10, 2025 07:09 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழக சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், பல்கலையில் துணைவேந்தர்களின் நிய-மன விவகாரத்தில், கவர்னரின் தலையீடு அதிகரிப்பதாகவும், தமி-ழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில், நேற்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. அதில், சட்டச-பையில் நிறைவேற்றப்படும் மசோதாவை நிறுத்தி வைக்கும் முடிவும் அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்பும் முடிவை, கவர்னர் ஒரு மாதத்தில் எடுக்க வேண்டும்.

அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக அந்த மசோதாவை திருப்பி அனுப்பும் பட்சத்தில், அந்த முடிவை, மூன்று மாதங்க-ளுக்குள் எடுக்க வேண்டும் என, கவர்னருக்க காலக்கெடுவை நிர்-ணயம் செய்து தீர்ப்பளித்தது. உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பை வர-வேற்கும் வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.முக., சார்பில், பரமத்தி வேலுார் சாலை, செலம்ப கவுண்டர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமையில், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாடினர்.






      Dinamalar
      Follow us