ADDED : நவ 25, 2024 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டை, மோகனுார் பிரிவு சாலையில் ஞாயிறு தோறும் நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது. இங்கு, பர-மத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், பொத்தனுார் மற்றும் ப.வேலுார் பகுதியை சேர்ந்த விவசாயிகள், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்ப-னைக்கு கொண்டு வருகின்றனர்
. அவ்வாறு கொண்டு வரப்படும் நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டு வாங்கி செல்வர். கடந்த வாரத்தைவிட இந்த வாரம், கோழி விலை சரிந்தே விற்பனை செயயப்பட்டது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக்கோழி, 500 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 400 ரூபாய்க்கு விற்பனையானது. சபரிமலை சீசனால், பெரும்பாலான மக்கள் அசைவத்தை விரும்புவதில்லை. இதனால் விலை சரிந்து விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.