ADDED : பிப் 27, 2026 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்; கம்மநல்லுார் கிராமத்தில், பாசன வாய்க்கால் துாய்மை பணிகளில் பஞ்சாயத்து தொழிலா-ளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கம்மநல்லுார் கிரா-மத்தில் வாழை, வெற்றிலை, நெல் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். கட்டளை புதிய வாய்க்கால் பகுதிகளில் பிரிந்து, மதகு வழி-யாக கம்மநல்லுார் கிராமத்திற்கு பாசன வாய்க்கால் வருகிறது. பாசன வாய்க்கால் தண்-ணீரை கொண்டு சாகுபடி செய்யப்படுகிறது.தற்போது பாசன வாய்க்கால் பகுதிகளில், வளர்ந்-துள்ள செடிகள் காரணமாக தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சா-யத்தில் உள்ள, 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, துாய்மை பணி நடந்தது. இதில் பாசன வாய்க்கால் இருபுறமும் வளர்ந்த செடிகள், புதர்கள் வெட்டி அகற்றப்பட்டன.

