/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு பேரணி
/
போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 12, 2025 02:12 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோட்டில், நேற்று போலீசார் சார்பில், 'போதை இல்லா தமிழகம்' விழிப்புணர்வு பேரணி நடந்தது. வாலரைகேட் ரவுண்டானா பகுதியில் இருந்து துவங்கிய பேரணியை, டி.எஸ்.பி., கிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், 'போதை அழிவுக்கான பாதை; போதை இல்லா தமிழகம்' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை, மாணவ, மாணவியர் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
பேரணியில், 'பான் மசாலா, குட்கா போன்றவற்றை விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது; இதை விற்பதும், பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றம்' என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை, பொதுமக்களுக்கு வினியோகித்தனர். வாலரை கேட்பகுதியில் தொடங்கிய பேரணி, தாசில்தார் அலுவலகம்
முன் நிறைவடைந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.