நாமக்கல்: நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நில-வரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 485 காசுக்கு விற்ற முட்டை விலை, ஐந்து காசு உயர்த்தி, 490 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சிய-டைந்துள்ளனர்.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை(காசுகளில்) நில-வரம்:சென்னை, 550, ஐதராபாத், 480, விஜயவாடா, 520, பர்வாலா, 494, மும்பை, 530, மைசூரு, 530, பெங்களூரு, 520, கொல்-கட்டா, 580, டில்லி, 514 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முட்டைக்கோழி ஒரு கிலோ, 107 ரூபாய்; பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்-புக்குழு கூட்டத்தில், கறிக்கோழி ஒரு கிலோ, 92 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

