நாமக்கல்,: நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நில-வரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 555 காசுக்கு விற்ற முட்டை விலை, ஐந்து காசு உயர்த்தி, 560 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. சீதோஷ்ண மாற்றம் காரண-மாக, நுகர்வு அதிகரித்துள்ளதால், முட்டை விலை உயர்ந்து வருகி-றது.
நாட்டின் பிற மண்டல முட்டை விலை(காசுகளில்) நிலவரம்:சென்னை, 620, ஐதராபாத், 580, விஜயவாடா, 585, பர்வாலா, 603, மும்பை, 645, மைசூரு, 612, பெங்களூரு, 610, கோல்-கட்டா, 665, டில்லி, 635 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர், வியாபா-ரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, முட்டைக்-கோழி, 106 ரூபாய்க்கும், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, கறிக்கோழி, 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

