ADDED : மார் 31, 2025 03:12 AM
நாமக்கல்: நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நில-வரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 460 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 465 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை, நான்கு நாட்களில், 50 காசு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 520, ஐதராபாத், 450, விஜயவாடா, 470, பர்வாலா, 395, மும்பை, 510, மைசூரு, 495, பெங்களூரு, 505, கோல்-கத்தா, 525, டில்லி, 410 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கி-ணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 87 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்-டத்தில், ஒரு கிலோ, 113 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்-ணயம் செய்யப்பட்டது.