ADDED : மே 05, 2025 03:01 AM
நாமக்கல்: நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நில-வரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர்.
இதையடுத்து, 480 காசுக்கு விற்ற முட்டை விலை, 10 காசு உயர்த்தி, 490 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை உற்-பத்தி சரிந்துள்ளதாலும், நுகர்வு அதிகரித்துள்ளதாலும், கொள்-முதல் விலை உயர்ந்து வருகிறது. நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 530, ஐத-ராபாத், 455, விஜயவாடா, 480, பர்வாலா, 440, மும்பை, 520, மைசூரு, 525, பெங்களூரு, 505, கோல்கட்டா, 500, டில்லி, 458 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 89 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, எட்டு ரூபாய் உயர்த்தி, ஒரு கிலோ, 97 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பல்ல-டத்தில் நடந்த கூட்டத்தில், ஒரு கிலோ, 96 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலையை, மூன்று ரூபாய் அதிகரித்து, ஒரு கிலோ, 99 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.