ADDED : பிப் 03, 2026 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை; நாமகிரிப்பேட்டை அடுத்த ஆயில்பட்டி, ஆண்டி-குட்டை பகுதியை சேர்ந்தவர் மாரப்பகவுண்டர், 75. இவர், நேற்று முன்தினம், டூவீலரில் வடுகம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வடுகம் ரோட்டில் இருந்த வேகத்தடையில் பைக் ஏறியபோது, எதிர்-பாராத விதமாக நிலைதடுமாறி மாரப்பகவுண்டர் கீழே விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின் மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், நேற்று மாரப்பகவுண்டர் உயிரிழந்தார். நாமகிரிப்-பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

