/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாவட்டத்தில் மின்வாரிய நுகர்வோர் குறைதீர் முகாம் அறிவிப்பு
/
நாமக்கல் மாவட்டத்தில் மின்வாரிய நுகர்வோர் குறைதீர் முகாம் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் மின்வாரிய நுகர்வோர் குறைதீர் முகாம் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் மின்வாரிய நுகர்வோர் குறைதீர் முகாம் அறிவிப்பு
ADDED : நவ 01, 2025 01:13 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் மின்வாரியம் சார்பில், நவ., மாதத்திற்கான, நுகர்வோர் குறைதீர் முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் மின் வினியோகம் சம்பந்தமான குறைகளை நேரில் கேட்டறிந்து தீர்வுகாண, ஒவ்வொரு மாதமும் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நவ., மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், வரும், 5 காலை, 11:00 மணிக்கு நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. 12 காலை, 11:00 மணிக்கு, ப.வேலுார் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 15 காலை, 11:00 மணிக்கு, பள்ளிப்பாளையம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 19 காலை, 11:00 மணிக்கு திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 26 காலை, 11:00 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.
மின்வினியோகம் சம்பந்தமான குறைகளை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், முகாமில் நேரடியாக கலந்துகொண்டு, மேற்பார்வை பொறியாளரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

