/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கேலோ இந்தியா திட்ட வாலிபால் பயிற்சியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்பு
/
கேலோ இந்தியா திட்ட வாலிபால் பயிற்சியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்பு
கேலோ இந்தியா திட்ட வாலிபால் பயிற்சியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்பு
கேலோ இந்தியா திட்ட வாலிபால் பயிற்சியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 29, 2025 12:55 AM
நாமக்கல், 'கேலோ இந்தியா திட்டத்திற்காக, வாலிபால் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், கேலோ இந்தியா திட்ட நிதியுதவியில் துவக்க நிலை வாலிபால் பயிற்சிக்கான மாவட்ட மையம், நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் அமைக்கப்பட உள்ளது.
இம்மையத்தில், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தினசரி வாலிபால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்க, தேசிய அளவில் சாதனை படைத்த, 40 வயதுக்குட்பட்ட வாலிபால் வீரர் அல்லது வீராங்கனை ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
விண்ணப்பதாரர் குறைந்தது, ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமலும், தற்போது, நாமக்கல் மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில், பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கு இடையேயான போட்டிகளில், பதக்கம் வென்றவராகவோ, சர்வதேச போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு, 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக, 25,000 ரூபாய் வழங்கப்படும். இப்பணியானது, முற்றிலும் தற்காலிகமானது. இதன் அடிப்படையில், வேலை வாய்ப்பு சலுகைகளோ, நிரந்தரப் பணியோ கோர இயலாது. தகுதியானவர்கள், நாமக்கல் விளையாட்டு அலுவலகத்தில், அதற்கான விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, வரும், ஜூலை, 1 மாலை, 5:00 மணிக்குள் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், வரும், ஜூலை, 3 காலை, 10:00 மணிக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.