/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பூஜை முதல் சமையல் வரை அனைத்தும் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத விழா
/
பூஜை முதல் சமையல் வரை அனைத்தும் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத விழா
பூஜை முதல் சமையல் வரை அனைத்தும் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத விழா
பூஜை முதல் சமையல் வரை அனைத்தும் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத விழா
ADDED : ஆக 12, 2024 07:00 AM
நாமக்கல்: நாமக்கல் அருகே, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு பூஜையில், ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.நாமக்கல் அருகே ஏ.எஸ்.பேட்டையில் இருந்து போதுப்பட்டி செல்லும் சாலையில், காமாட்சி அம்மன் நந்தவனம் அமைந்துள்ளது.
24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர், ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் சிறப்பு பூஜையை நடத்தி வருகின்றனர்.அதன்படி நேற்று முன்தினம் இரவு, ஏ.எஸ்.பேட்டை பகவதி அம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து வரப்பட்டது. திருமணமாகாத ஆண்கள் மற்றும் சிறுவர்கள், மோகனுார் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். அதையடுத்து கோரிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்தனர். தொடர்ந்து பிடிமண் எடுத்து உருவம் செய்து வழிபட்டனர். நேற்று மதியம் மகா பூஜை நடந்தது. இதில் ஆடுகள் பலியிடப்பட்டு பூஜை நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்த பின், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் பெண்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆண்கள் மட்டுமே பூஜையை நடத்தினர். சமையல் செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஆண்களே மேற்கொண்டனர். மீதமான சாப்பாடு, சாப்பிட்ட இலை உள்ளிட்ட அனைத்தையும் அங்கேயே குழி தோண்டி புதைத்தனர். இதையடுத்து மண்ணால் செய்யப்பட்ட உருவங்களை எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் கரைத்து விட்டனர். இந்த பூஜை, 21 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவித்தனர்.

