sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'உழவரை தேடி வேளாண்மை' விவசாயிகளுக்கு விளக்கம்

/

'உழவரை தேடி வேளாண்மை' விவசாயிகளுக்கு விளக்கம்

'உழவரை தேடி வேளாண்மை' விவசாயிகளுக்கு விளக்கம்

'உழவரை தேடி வேளாண்மை' விவசாயிகளுக்கு விளக்கம்


ADDED : ஜூலை 16, 2025 01:29 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ராசிபுரம் யூனியன், பொன்குறிச்சி கிராமத்தில், 'உழவரை தேடி வேளாண்மை' என்ற பெயரில், நேற்று உழவர் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடந்தது.

மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மணிமேகலா தேவி தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''கிராமங்களுக்கு நேரடியாக சென்று உழவர்களை சந்தித்து வேளாண்மையை அடுத்தக்கட்ட நிலைக்கு எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களை வேளாண்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் எடுத்துக்கூறுவதே இம்முகாமின் நோக்கம்,'' என்றார்.

ராசிபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் தனலட்சுமி, 'உயிர் உரங்கள், நுண்ணுாட்டம், சொட்டுநீர் பாசனம்' குறித்து பேசினார். வேளாண் பொறியியல் துறை அலுவலர் பிரபா மற்றும் தோட்டக்கலை அலுவலர் சுப்பிரமணியம், கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வாளர் தமிழ்செல்வன், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் பூங்கொடி ஆகியோர் கலந்துகொண்டு, அரசு திட்டங்களை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.






      Dinamalar
      Follow us