ADDED : ஜூலை 07, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த குருக்கபுரம்  அருகே, எளையாம்பாளையம் சடையப்பன் காடு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம், 57; இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில்  உழவுப்பணி செய்வதற்-காக உறவினரிடம்  இருந்து டிராக்டரை வாங்கி வந்தார்.
நிலத்தில்  களைகளை  வெட்டிக் கொண்டிருந்தபோது கட்டுப்-பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில் பரமசிவம் மீது டிராக்டர் கவிழ்ந்ததில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அக்கம் பக்கத்தினர் பரமசிவம் உடலை மீட்டனர். ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

