/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
நாமக்கல்லில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூன் 26, 2025 01:31 AM
நாமக்கல், 'நாமக்கல்லில் நாளை, மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர்(பொ) சுமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், நாளை காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கலெக்டர் தலைமை வகிக்கிறார். விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு, வேளாண் இடுபொருள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.