sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சேதமடைந்த சாலையால் விவசாயிகள் தவிப்பு

/

சேதமடைந்த சாலையால் விவசாயிகள் தவிப்பு

சேதமடைந்த சாலையால் விவசாயிகள் தவிப்பு

சேதமடைந்த சாலையால் விவசாயிகள் தவிப்பு


ADDED : ஜூலை 30, 2025 01:32 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை,நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில், சேதமடைந்துள்ள கிராமத்து சாலையால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

நாமகிரிப்பேட்டை ஒன்றியம், திம்மநாயக்கன்பட்டி ஊராட்சி, ஆத்துார் பிரதான சாலையில் அமைந்துள்ளது. அங்கிருந்து வேப்பிலைக்குட்டை செல்லும் கிராமத்து சாலை, 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது தொடர் மழை, கனரக வாகனங்கள் அடிக்கடி வந்து செல்வதால், கொஞ்சம் கொஞ்சமாக சாலை சேதமடைந்து வருகிறது. சாலையில் ஏற்பட்டுள்ள குழியில், மழைநீர் தேங்கி நிற்பதுடன், சாலை முழுதும் பெயர்ந்து ஜல்லி கற்களாக மாறிவிட்டது. வேப்பிலைக்குட்டை வரை, 3 கி.மீ., துாரத்திற்கு சாலை சேதமடைந்துள்ளது. இதனால், இவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.

பள்ளி மாணவர்கள், விவசாயிகள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, சாலையை தரம் உயர்த்தி சீரமைக்க வேண்டும் அல்லது புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us