sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காவிரி ஒழுங்காற்று குழுவுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

/

காவிரி ஒழுங்காற்று குழுவுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

காவிரி ஒழுங்காற்று குழுவுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

காவிரி ஒழுங்காற்று குழுவுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்


ADDED : ஜன 20, 2024 07:40 AM

Google News

ADDED : ஜன 20, 2024 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் : உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி வெளியிட்ட அறிக்கை:

டில்லியில், நேற்று முன்தினம், காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. அதில், தமிழகத்திற்கு, ஜனவரி மாதத்துக்கான, 2.76 டி.எம்.சி., தண்ணீரை, காவிரியில் இருந்து, கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என, காவிரி மேலாண் ஆணையத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. நடப்பு நீர்ப்பாசன ஆண்டின் கணக்குப்படி, 166 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், 75 டி.எம்.சி., தண்ணீரை மட்டுமே திறந்து விட்டுள்ளது. 91 டி.எம்.சி., தண்ணீரை நிலுவையில் வைத்துள்ளது.

இந்நிலையில், நிலுவையில் உள்ள நீரை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல், வெறும் கண் துடைப்புக்காக, காவிரியில் ஜன., மாதத்திற்கான, 2.76 டி.எம்.சி., தண்ணீரை மட்டுமே திறக்க காவிரி மேலாண் வாரியத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

இது தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. அதனால், தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இப்படி தொடர்ந்து தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் காவிரி ஒழுங்காற்று குழுவின் செயலுக்கு, கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

வரும் காலங்களில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கு நீரை கர்நாடகா அரசு வழங்க, காவிரி ஒழுங்காற்று குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us