sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மர்ம பொருள் வெடித்து தந்தை, மகள் படுகாயம்

/

மர்ம பொருள் வெடித்து தந்தை, மகள் படுகாயம்

மர்ம பொருள் வெடித்து தந்தை, மகள் படுகாயம்

மர்ம பொருள் வெடித்து தந்தை, மகள் படுகாயம்


ADDED : பிப் 17, 2025 01:02 AM

Google News

ADDED : பிப் 17, 2025 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: பஸ் ஸ்டாண்ட் அருகே டீக்கடையில் அதிகாலை மர்ம பொருள் வெடித்து சிதறியதில், பஸ்சுக்கு காத்திருந்த, தந்தை, மகள் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கவின் கர்ணன், 34, டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கடைக்குள் மர்ம பொருள் வெடித்து சிதறியது. இதில், கடையில் இருந்த பொருட்கள், இரும்பு ஷட்டரை பிய்த்துக்கொண்டு, 50 அடி துாரத்துக்கு துாக்கி வீசப்பட்டன.

அப்போது, கடை முன் பஸ்சுக்காக காத்திருந்த திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஜனனி, 21, அவரது தந்தை விஜயகுமார், 54, பலத்த காயமடைந்தனர். இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

திருச்செங்கோடு போலீசார், 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, விபத்து நடந்த கடையில் விசாரணை நடத்தினர். இதில், கடையில் இருந்த சிலிண்டர் வெடிக்காமல் இருந்தது தெரியவந்தது. எந்த பொருள் வெடித்தது என, தெரியவில்லை. ஜெலட்டின் போன்ற சக்திவாய்ந்த வெடிபொருள் வெடித்திருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. கவின் கர்ணனிடம் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us