/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பைக்கும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து உடல் நசுங்கி தந்தை, மகள் பலி; மகன் படுகாயம்
/
பைக்கும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து உடல் நசுங்கி தந்தை, மகள் பலி; மகன் படுகாயம்
பைக்கும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து உடல் நசுங்கி தந்தை, மகள் பலி; மகன் படுகாயம்
பைக்கும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து உடல் நசுங்கி தந்தை, மகள் பலி; மகன் படுகாயம்
ADDED : பிப் 04, 2025 06:41 AM
நாமக்கல்: பைக்கும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி தந்தை, மகள் உயிரிழந்தனர்; மகன் படுகாயமடைந்தார்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் கிடாரம் காட்டு சாலையை சேர்ந்-தவர் சிவசுப்ரமணியன், 51; லாரி டிரைவர். இவரது மகள் ஸ்ரீநிதி, 19; கோவை தனியார் கல்லுாரியில், முதலாமாண்டு படித்து வந்தார். மகன்
ஸ்ரீகார்த்திகேயன், 16, மோகனுார் தனியார் பள்-ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.இந்நிலையில்,
சிவசுப்ரம-ணியன், தன் மகள், மகனுடன், பழனி முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு,
நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு கரூர் வந்தனர். அங்கிருந்து, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில், மூவரும்
ஊருக்கு சென்றுகொண்டிருந்தனர். இதில் மூவரும், 'ஹெல்மெட்' அணியவில்லை. மோகனுார், கீழ்பாலப்-பட்டி
முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாரி டிரைவர் சர-வணன், 51; இவர், தேவகோட்டையில் இருந்து
வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு, நள்ளிரவு, 12:45 மணிக்கு, மோகனுார் - ப.வேலுார் சாலை, பி.டி.ஓ.,
அலுவலகம் அருகே துாக்க கலக்-கத்தில் வந்துள்ளார். அப்போது, பைக்கும், லாரியும் நேருக்கு நேர் மோதி
விபத்துக்குள்ளானது.
இதில், சிவசுப்ரமணியன், மகள் ஸ்ரீநிதி ஆகிய இருவரும், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
உயிரிழந்தனர். படுகா-யமடைந்த ஸ்ரீகார்த்திகேயன், லாரி டிரைவர் சரவணன் ஆகிய இருவரையும், அக்கம்
பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, மாண-வரை கோவை தனியார் மருத்துவமனையிலும், லாரி டிரைவரை,
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையிலும் சேர்த்-தனர். மோகனுார் போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர். கோவிலுக்கு சென்று திரும்பியபோது ஏற்பட்ட சாலை விபத்தில், தந்தை, மகள் பலியான
சம்பவம், உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.